நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மக்கள் கரோனா சிகிச்சைக்காக காத்திருப்பதும், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன், படுக்கை மற்றும் மருந்து தேவைக்காக தவித்து வருவதும் நாள்தோறும் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு மருத்துவ முறைகளையும், அவசர பயன்பாட்டுக்கான மருந்துகளையும் அனுமதித்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அத்தகைய வகையில் ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி ஆய்வகம் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட 2 டிஆக்ஸி 2 குளுகோஸ் மருந்து கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அவசரப் பயன்பாட்டுக்கான ஒப்புதலை அளித்துள்ளது. … மேலும் வாசிக்க