148,867 சுற்றுலாப் பயணிகள் வருகை
கடந்த மாதத்தில் மாத்திரம் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் இருந்து 27,304 பேரும், ரஷ்யாவில் இருந்து 15,103 பேரும், ஜேர்மனியில் இருந்து 13,173 பேரும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.