278 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

278 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு 278 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகும் கைதிகளில், 10 பெண் கைதிகள் உட்பட வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 15 கைதிகளும் மஹர சிறைச்சாலையிலுள்ள 37 கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளைச் சந்திப்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கும் கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் இனிப்புப் பொதிகளைக் கைதிகளுக்கு வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் படி சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் கைதிகளை சந்திக்க வேண்டும் என்றும்  நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )