விடுமுறை வழங்காத ஆத்திரத்தில் சக ஊழியர்களை கத்தியால் குத்திய நபர்

விடுமுறை வழங்காத ஆத்திரத்தில் சக ஊழியர்களை கத்தியால் குத்திய நபர்

விடுமுறை வழங்க மறுத்ததால் 4 பேரை கத்தியால் குத்திய அரச ஊழியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியா, மேற்கு வங்க மாநிலத்தில் அரச ஊழியர் ஒருவர் தனது அலுவலகத்தில் விடுமுறை தர மறுத்ததால் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமித் குமார் என்ற நபர் கொல்கத்தாவில் தொழில்நுட்பக் கல்வித்துறையில் பணியாற்றிவந்தார். இவர் இன்று காலை, விடுமுறை எடுப்பது தொடர்பில் தனது சக ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், 4 பேரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். கத்திக்குத்தால் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கத்தியால் குத்திய நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )