09 டெங்கு மரணங்கள் பதிவு

09 டெங்கு மரணங்கள் பதிவு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 25 , 891 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும்  தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் 5,624 டெங்கு நோயாளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3,930 டெங்கு நோயாளர்களும் கம்பஹாவில் 2,487 டெங்கு நோயாளர்களும் கண்டியில் 1,986 டெங்கு நோயாளர்களும் இரத்தினபுரியில் 1,441 டெங்கு நோயாளர்களும் களுத்துறையில் 1,372 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )