பஸ் ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்து : 7 பேர் பலி !

பஸ் ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்து : 7 பேர் பலி !

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ( St. Petersburg) பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மொய்க்கா ஆற்றின் (Moika River) மேல் கட்டப்பட்டுள்ள Potseluev பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் வீழ்ந்தது.

இதன்போது பஸ்ஸில் 20 பேர் இருந்துள்ளனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )