இங்கிலாந்தில், இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக போராட்டம்

இங்கிலாந்தில், இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக போராட்டம்

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் குழுவினரால் நேற்று (08) இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டடுள்ளது.

இலங்கை மனித உரிமைகளை மீறிய நாடு என்பதால் இலங்கை கிரிக்கெட்டை தடை செய்ய வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இதன்போது அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் தங்களின் தமிழ் சமூகத்துக்கு உரிமை இல்லை என்றும், அவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், இலங்கை போர்க்குற்றம் இழைத்த நாடு என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய அரச தலைவரை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )