மருந்துகளை உறுதிப்படுத்த விசேட ஸ்டிக்கர்

மருந்துகளை உறுதிப்படுத்த விசேட ஸ்டிக்கர்

மருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்துவதற்கு விசேட ஸ்டிக்கர் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மருந்துகளுக்காக போலி பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் அங்கீகரிக்கப்படும் சகல மருந்துகளுக்கும் விசேட ஸ்டிக்கர் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக அதன் தலைவர், விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )