மின்னல் தாக்கி நான்கு மாடுகள் உயிரிழப்பு

மின்னல் தாக்கி நான்கு மாடுகள் உயிரிழப்பு

நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததையடுத்து மின்னல் தாக்கி புல்தரையில் கட்டப்பட்டிருந்த மூன்று மாடுகளும் ஒரு பசுவும் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகே வீதியில் கலமுதுன தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த நான்கு மாடுகள் கடந்த 13 ஆம் திகதி மாலை 5 மணியளவில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்னல் தாக்கிய இடத்தில் பெரிய பள்ளம் இருந்ததாகவும், இறந்த விலங்குகளின் மதிப்பு எட்டு இலட்சம் என்றும் பண்ணை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )