வெடி பொருட்களுடன் 04 பேர் கைது

வெடி பொருட்களுடன் 04 பேர் கைது

நாவுல பிபில பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் நேற்று (18) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவுல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (18) நாவுல பிபில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, சந்தேகநபர்களிடம்   05 டெட்டனேட்டர்கள், 03 வோட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் வயர் ரோல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38, 49, 50 மற்றும் 65 வயதுடைய கட்டுகஸ்தோட்டை, கம்பளை, எலஹெர மற்றும் உடலகவின்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவராவர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )