“தேவைப்படும் போது ஆதரவளிப்போம்”

“தேவைப்படும் போது ஆதரவளிப்போம்”

புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தேவைப்படும் போது ஆதரவளிக்கும் என கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

“தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டைத் தள்ளுவதற்கு ஆதரவை வழங்குவது அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் கடமையாகும்” என்று தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் , 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய அனுரகுமார திஸாநாயக்கவை நான் வாழ்த்துகிறேன். தேசத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் அவருக்கு பலம் இருப்பதாக நான் நம்புகிறேன்,” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )