ராஜஸ்தான் – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை

ராஜஸ்தான் – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று(15) கவுகாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க மைத்தானத்தில் நடைபெறும் 65-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

ராஜஸ்தான் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் எடுத்து 2 ஆவது இடத்தில் இருக்கிறது. டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ அணி தோற்றதன் மூலம் ராஜஸ்தான் அடுத்த சுற்றை (பிளே-ஆப்) உறுதி செய்தது.

ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை தொலைத்து விட்ட பஞ்சாப் அணி 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது முந்தைய லீக் போட்டிகளில் சென்னை, பெங்களூரு அணிகளிடம் வரிசையாக தோல்வி கண்டது.

ராஜஸ்தான் அணியின் 2-வது உள்ளூர் மைதானமான கவுகாத்தியில் இந்த சீசனில் நடைபெறும் முதலாவது போட்டி இதுவாகும். கடந்த ஆண்டு இங்கு நடந்த 2 போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணி 190 ஓட்டங்களுக்கு மேல் எடுத்ததுடன் வெற்றியையும் தனதாக்கியது. எனவே வலுவான ராஜஸ்தான் அணியின் சவாலை சமாளிக்க வேண்டும் என்றால் பஞ்சாப் அணி எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டால் தான் சாத்தியமாகும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் 16 போட்டிகளிலும், பஞ்சாப் 11 போட்டிகளிலும் வென்று இருக்கின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )