கடந்த 2 வருடங்களில் 75 புதிய சட்டங்கள்

கடந்த 2 வருடங்களில் 75 புதிய சட்டங்கள்

கடந்த 2 வருடங்களில் மாத்திரம் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, தெற்காசியாவில் அதிநவீன சட்ட முறைமை கொண்ட ஒரே நாடாக இலங்கை மாறியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊழலை ஒழிப்பதற்கு பல புரட்சிகரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை இன்று (15) காலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )