இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் காலமானார்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் காலமானார்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் Jean-François Pactet நேற்று (26) காலமானார்.

53 வயதான Jean-François Pactet நேற்று (26) ராஜகிரியவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Jean-François Pactet, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவராக பணியாற்றியுள்ளார்.

இதற்கு முன், Jean-François Pactet அமெரிக்காவிற்கான வொஷிங்டனில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திலும் (2012-2016) பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோவுக்கான பிரான்ஸ் நிரந்தர பிரதிநிதித்துவத்திலும் நியமிக்கப்பட்டார்.

அவர் பிரான்சின் வெளியுறவு அமைச்சகத்தின் பிரதி செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரது மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )