மூன்றாவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது கொல்கத்தா!

மூன்றாவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது கொல்கத்தா!

17 ஆவது ஐ.பி.எல் கிண்ணத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுவீகரித்துள்ளது.

17 ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையில் சென்னையில் நேற்று இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்நிலையில், 114 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியின் 17 ஆவது ஐ.பி.எல் கிண்ணத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றியது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )