இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

பிராவிடன்ஸ் மைதானத்தில் (Providence Stadium) நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது.

அதற்கமைய நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி 20
ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை பதிவு செய்தது.

இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா 57 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 47 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்டியா 23 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் ஜோர்டன் ( Chris Jordan) 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய 172 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிக் களமிறங்கிய இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் ஹாரி புரூக்
25 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 23 ஓட்டங்களையும் ஜோஃப்ரா ஆர்ச்சர் 21 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ்
மற்றும் அக்சர் படேல் தலா மூன்று விக்கெட்டுகளையும் ஜஸ்பிரித் பும்ரா 02 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இருத்தி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அதற்கமைய நாளைய தினம் கென்சிங்டன் ஓவல் பார்படாஸ் (Kensington Oval Barbados) மைதானத்தில் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )