
ரணில் விக்கிரமசிங்க எதிர் கட்சி உறுப்பினர்களைஅழைத்து விசேட கலந்துரையாடல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று 13 ம் திகதி பிற்பகல் எதிர் கட்சி உறுப்பினர்களை அழைத்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்
கொள்ளுப்பிட்டி தனியார் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, உதய கம்மன்பில, நிமல் லான்சா, ராஜித சேனாரத்ன, ருவான் விஜயவர்தன, சாகல ரத்நாயக்க உள்ளிட்டோரும் இதற்காக இணைந்து கொண்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka