மதுபானம் அருந்திய 32 பேர் உயிரிழப்பு

மதுபானம் அருந்திய 32 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று (19) சட்டவிரோத மதுபானம் அருந்திய 32 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கள்ளக்குறிச்சி – கருணாபுரம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட சட்டவிரோத மதுபானத்தினை அருந்தியவர்கள் வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற பிரச்சினைகளால் திடீரென பாதிக்கப்பட்டுள்ளனர். 

 இதனையடுத்து பலர் கள்ளக்குறிச்சி அரச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,103 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் சட்டவிரோத மதுபானம் அருந்தியமை தெரியவந்துள்ளது. 

சிகிச்சைப் பெற்று வருபவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும்  தெரியவந்துள்ளது.

மேலும், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 3 பேரையும் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் விசாரனைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )