புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா ?

புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா ?

இயற்கை வைத்தியம் மூலம் ஒரு வாரத்தில் அழகான புருவங்களை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயை புருவங்களில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த எண்ணெயை இரவில் புருவங்களில் தடவி காலையில் குளித்தால் அதிக பலன் கிடைக்கும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை நேரடியாக புருவங்களில் தடவ வேண்டும். 20 நிமிடம் உலர்த்திய பின் கழுவவும். இப்படி ஒரு வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வலுவான புருவத்தை அடைய முடியும்.

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் மிகவும் தடிமனாகவும் எண்ணெய் நிறைந்ததாகவும் தெரிகிறது. ஆமணக்கு எண்ணெயில் பஞ்சை தோய்த்து புருவங்களில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவவும்.

தேங்காய் எண்ணெய்

புருவங்கள் அடர்த்தியாக இருக்க தேங்காய் எண்ணெய் தடவலாம். அதுமட்டுமின்றி, புருவங்களுக்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கிறது. எனவே, உங்கள் புருவங்களை அடர்த்தியாகவும் அழகாகவும் மாற்ற, இயற்கையான தேங்காய் எண்ணெயை ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவுவது நல்ல பலனைத் தரும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )