விடுதி சுற்றிவளைப்பில் ஐவர் கைது

விடுதி சுற்றிவளைப்பில் ஐவர் கைது

யாழ்ப்பாணம் – சுண்டுக்குளி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கி வந்த விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில், ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் நீண்டகாலமாக விடுதி என்ற போர்வையில் பாலியல் தொழில் நடைபெறுவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமைய, சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அருகில் இயங்கிய குறித்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டது. 

இதன்போது 4 பெண்களும், விடுதியின் உரிமையாளரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )