இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிக்கின்றோம் !

இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிக்கின்றோம் !

இராணுவத்தினருக்கு எதிராக சர்வதேச அரங்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் அனைத்தையும் நிராகரிக்கின்றோம். இராணுவத்தினர் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களை முடிவுக்கு கொண்டு வர
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும் என சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சம்புத்த ஜயந்தி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரை
யாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

’30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய இராணுவத்தினர் நிம்மதியில்லாமல் இருக்கின்றார்கள். அவர்கள் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்ததால்தான் அரசியல்வாதிகள் இன்று சுதந்திரமாக மேடை போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இராணுவத்தினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்குடையவை. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஆகவே, இராணுவத்தினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமாயின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்கவேண்டும்.

இராணுவத்தினர் இன்று கௌரவமாக வாழவில்லை. பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு அவர்கள் முகங்கொடுத்துள்ளார்கள்.

அரசமைப்பின் ஊடாக முப்படையினரது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்.

அரசியல் நோக்கத்துக்காக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்போம்.

இராணுவத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து அரசியல் தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ள இராணுவத்தினர் நாட்டின் பாதுகாப்பு மற்றும் கௌரவம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.’ – என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )