மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள்

மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள்

நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழஙகுவதற்கான “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (16) இடம்பெற்றது.  

மன்னார் நகர மண்டப கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள் வழங்கப்படவுள்ள நிலையில், அவற்றில் 442 உறுதிகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )