யுவதியை காப்பாற்றிய பொலிஸ் சார்ஜன்ட்

யுவதியை காப்பாற்றிய பொலிஸ் சார்ஜன்ட்

மன்னார் பிரதான பாலத்திலிருந்து குதிக்க முயன்ற யுவதி ஒருவரை போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காப்பாற்றியுள்ள சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்று (29) காலை மன்னார் நகருக்குள் நுழையும் பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள அலுவலகத்தில் பிரதேச போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகர பணிபுரிந்து கொண்டிருந்தபோது பெண் ஒருவர் கையில் கடிதம் போன்ற ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து குறித்த அதிகாரியிடம் தமிழ் தெரியுமா? என கேட்டுள்ளார்.

அதற்கு சார்ஜன்ட் நீங்கள் யார் என்று தமிழில் கேட்க அந்தப் பெண், தன் கையில் இருந்த கடிதம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை பொலிஸ் சார்ஜென்ட்டின் மேசையில் வைத்துவிட்டு மன்னார் பாலம் நோக்கி ஓடியுள்ளார்.

யுவதியின் செயலால் திடுக்கிட்டு யுவதி தன்னுயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக சந்தேகித்து துரத்திச் சென்றுள்ளார்.

இந்நிலையில் யுவதி பாலத்தின் பாதுகாப்பு சுவரில் ஏறி கடலில் குதிக்கத் தயாரான நிலையில் மலலசேகர அந்தப் பெண்ணின் காலைப் பிடித்துக் காப்பாற்றினார்.

சார்ஜன்டினால் மீட்கப்பட்ட 24 வயதுடைய பெண் மன்னார் பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் சார்ஜன்டின் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )