80 வயது முதியவரை திருமணம் செய்துகொண்ட 23 வயது இளம் பெண்

80 வயது முதியவரை திருமணம் செய்துகொண்ட 23 வயது இளம் பெண்

80 வயது முதியவர் ஒருவர், பேத்தி வயதுடைய பெண் ஒருவரை காதலித்து, திருமணம் செய்து கொண்ட சம்பவம் சீனாவில் இடம் பெற்றுள்ளது.

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் வசித்து வருபவர் 80 வயதான லீ. இவர் அங்குள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த நிலையில், அங்கு பணிபுரியும் 23 வயது சியாஃபங் என்ற இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், இறுதியில் இருவரும் காதல் வலையில் விழுந்தனர். இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது, சியாஃபங் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால், முதியவர் லீ மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த சியாஃபங், குடும்பமே வேண்டாம் என்று கூறிவிட்டு, அவர் கனவு கண்டபடி, முதியவர் லீயை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த புதிய ஜோடியின் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்த பலரும் காதலுக்கு வயதில்லை, காதலுக்கு கண்ணில்லை என்று வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மற்றொரு பக்கம் பணத்திற்காக ஒரு வயதானவரை, அந்த இளம்பெண் திருமணம் செய்து கொண்டதாக பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )