இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றம்

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றம்

உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேற்றப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் டேரன் சமி கிரிக்கெட் மைதானதில் (Daren Sammy Cricket Ground) நடைபெற்ற குறித்த போட்டியில்
பங்களாதேஷ் அணி நெதர்லாந்து அணியை 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முன்னதாக , பங்களாதேஷ் நெதர்லாந்து போட்டியின் முடிவை அடுத்து இலங்கை முதல் சுற்றிலேயே வெளியேற நேரிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி , நேற்றைய போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி பங்களாதேஷ் வெற்றியீட்டியதனைத் தொடர்ந்து இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினை இழந்துள்ளது.

இருப்பினும் எதிர்வரும் 17ம் திகதி இலங்கை அணி நெதர்லாந்து அணியுடன் மற்றுமோரு முதல் சுற்றுப் போட்டியில் போட்டியிட உள்ளது.

இந்தப் போட்டியின் முடிவு எதுவாக இருந்தாலும் இலங்கையினால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )