நீச்சல் தடாகத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

நீச்சல் தடாகத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ரம்புக்கன பொலிஸ் பிரிவில் கடிகமுவ பிரதேசத்தில் லபுகொல்ல வத்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஊழியர் அங்கு உள்ள நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

ரம்புக்கனை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பன்வில பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. சடலம் தற்போது பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )