தினேஸூக்கு ரணில் கொடுத்த பொறுப்பு

தினேஸூக்கு ரணில் கொடுத்த பொறுப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவருக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்புகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் பொறுப்பை பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க இயலும் ஸ்ரீலங்கா என்ற உடன்படிக்கை நேற்று
முன் தினம் (16) வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையில்
அரசியல் கட்சிகள் உட்பட 34 தரப்புகள் கைச்சாத்திட்டன.


இந் நிலையில், ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க முன்வரும் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய தரப்புகளை ஒருங்கிணைக்கும் மற்றும் அவர்களுடன் பேச்சுகளை தினேஸ் குணவர்தன முன்னெடுத்து வருகிறார் எனவும் ரணில் விக்ரமசிங்க நடத்தும் முக்கிய மற்றும் இரகசிய சந்திப்புகளில் தினேஸ் குணவர்தனவும் பங்குபற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )