பாராளுமன்றத்திற்க்கு செல்கிறார் கருணாரத்ன பரணவிதான ?

பாராளுமன்றத்திற்க்கு செல்கிறார் கருணாரத்ன பரணவிதான ?

தலதா அத்துகோரள பதவி விலகியதைத் தொடர்ந்து வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று (23) அறிவித்துள்ளது.

புதன்கிழமை (21), ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகளை காரணம் காட்டி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

அவர் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வெற்றிடத்தை நிரப்புவதற்காக, SJB பாராளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதான, பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு அடுத்த வரிசையில் உள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதான SJBயின் இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் பட்டியலில் முன்னணியில் உள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான எக்சத் ஜனராஜ பெரமுனவின் (ஈ.ஜே.பி) பொலிட்பீரோ தலைவர் கருணாரத்ன பரணவிதான ஆவார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )