INS மும்பை போர்க்கப்பல் கொழும்பை வந்தடைந்தது

INS மும்பை போர்க்கப்பல் கொழும்பை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS மும்பை போர்க்கப்பல் இன்று (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை விமானப் படையினரால் இயக்கப்படும் டோனியர் கடல் ரோந்து விமானத்திற்கு தேவையான அத்தியாவசிய உதிரிப்பாகங்கள் INS மும்பை போர்க்கப்பலில் கொண்டு வரப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )