பஸ் நிலையத்தில் பிரசவம் ; வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்

பஸ் நிலையத்தில் பிரசவம் ; வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்

தெலுங்கானாவை சேர்ந்த  கர்ப்பிணி ஒருவர், கரீம் நகர் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள்  ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அப் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆந்திர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரும் குழந்தையும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும், பஸ் நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பாஸ் வழங்கப்படும் என தெலுங்கானா போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )