பத்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

பத்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சீரற்ற காலநிலையால் பத்து மாவட்டங்களில் டெங்கு வேகமாகப் பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 161 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இம்மாதம் 20 நாட்களுக்குள் 2,044 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், புத்தளம், காலி, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் வேகமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )