தலையில் தேங்காய் விழுந்ததில் குழந்தை உயிரிழப்பு

தலையில் தேங்காய் விழுந்ததில் குழந்தை உயிரிழப்பு

தேங்காய் ஒன்று தலையில்  விழுந்ததில் 11 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் கலஹா, தெல்தோட்டை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. 

கலஹா தெல்தோட்டை நாரன்ஹின்ன தோட்டத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் கியாங்ஷினி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குழந்தையை, அவருடைய தந்தை பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, ​​வீட்டின் முன்புறம் முப்பது அடி தூரத்தில் இருந்த தென்னை மரத்தில் இருந்து தேங்காய் ஒன்று குழந்தையின் தலையில் விழுந்துள்ளது.

பின்னர் குழந்தையை முச்சக்கர வண்டியில் தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த வைத்தியசாலையில் குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )