தாயால் கொல்லப்பட்ட ஒரு வயது குழந்தை

தாயால் கொல்லப்பட்ட ஒரு வயது குழந்தை

தனது ஒரு வயது, ஐந்து மாதங்களேயான மகளை மூக்கை அழுத்தி கொன்றதாகக்
கூறப்படும் இளம் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலாஹா பகுதியைச்சேர்ந்த இருபத்தொரு (21) வயதுடைய நபரே இவ்வாறு
கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது கணவர் வீட்டிலிருந்து வெளியில் சென்றதன் பின்னர், சந்தேக நபரான அந்த பெண்ணும், அவரது மகள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அப்போது, சந்தேக நபரான அந்த தாய், கோபமடைந்து மகளின் மூக்கு மற்றும் வாயை இறுக்கமாக மூடியதால், மகள் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் நடத்திய விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.


சம்பவ இடத்துக்கு வருகைதந்த கண்டி பதில் நீதவான் மஹிந்தலியனகே, நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தைப்பிரேதப் பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )