பாதாள உலகக் குழு உறுப்பினர் கீத்மால் பெனோய் டில்ஷான் கைது

பாதாள உலகக் குழு உறுப்பினர் கீத்மால் பெனோய் டில்ஷான் கைது

பாதாள உலகக் குழு உறுப்பினரான பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மத்துகம ஷான் என்பவரின் உதவியாளரான கீத்மால் பெனோய் டில்ஷான் என்பவர் டுபாயில் இருந்து கைது செய்து இன்று (29) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் குறித்த சந்தேகநபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

33 வயதான குறித்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக மத்துகம பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )