தயாசிறி ஜயசேகரவிடம் 200 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி அமைச்சர் பிரசன்ன கடிதம் !

தயாசிறி ஜயசேகரவிடம் 200 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி அமைச்சர் பிரசன்ன கடிதம் !

உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை வெளியிட்டமைக்காக 200 மில்லியன் ரூபா நஷ்டஈடாக வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கரவுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

14 நாட்களுக்குள் இழப்பீடு வழங்காவிட்டால்,வழக்கு தொடரப்படுமென்றும் அந்தகோரிக்கை கடிதத்தில் அமைச்சர் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார். தாம் பெற்ற
மதுவரி அனுமதிப் பத்திரத்தை கம்பஹா, மாகேவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் மதுவரி

உத்தியோகத்தர் ஒருவரின் பெயரில் வழங்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பான அறிக்கையினால் தனது நற்பெயருக்கு ஏற்பட்ட கலங்கத்துக்காக 200 மில்லியன்
ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவுக்கு இந்த
கோரிக்கை கடித்த்தை அனுப்பியுள்ளார்.

உரிய இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்காவிட்டால் அதற்கான தொகையையும் அதற்கான சட்டரீதியான வட்டியையும் பெற்றுக் கொள்ள வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் தனது சட்டத்தரணி நதீஷா ஹெட்டியாராச்சி ஊடாக தயாசிறிக்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கர மாத்தறை, அக்குரஸ்ஸவில் நடைபெற்ற கூட்டத்தில் தமது கட்சிக்காரர் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி
வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தொடர்பில் தொலைக்காட்சி, பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் மற்றும் காலை செய்தி வாசிப்பு நிகழ்ச்சிகளில் தெரிவித்த
கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவையென சட்டத்தரணி நதீஷா ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் பலமான அமைச்சரவை அமைச்சர் மற்றும் பொதுத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவான எனது
கட்சிக்காரர் மீதான மக்களின் நம்பிக்கையை பாரியளவில் சேதப்படுத்தும் சாத்தியக்கூறுகள் அவர் வெளியிட்டுள்ள கருத்துகளில் உள்ளதாகவும் இந்த கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் இந்தக் கருத்து தொடர்பில், அதன் ஊழியர் மதுவரி ஆணையாளர் நாயகத்திடம் கேட்டபோது, தனது வாடிக்கையாளரின்
பெயரிலோ அல்லது அவரது பரிந்துரையின் பேரிலோ வேறு எவருக்கும் மதுவரி அனுமதி பத்திரம் வழங்கப்படவில்லையென எனது கட்சிக்காரருக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி நதீஷா ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )