பெண்ணின் வயிற்றில் இருந்த எலும்புக்கூடு

பெண்ணின் வயிற்றில் இருந்த எலும்புக்கூடு

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தையை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பம் தரித்துள்ளார். ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளதால் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள இளம் பெண்ணிற்கு விருப்பம் இல்லை.

இதனால் மருந்து கடைக்கு சென்று கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் இளம்பெண்ணுக்கு பாதி அளவு கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த 3 வருடங்களாக இளம் பெண் வயிற்று வலியால் அவதி அடைந்துள்ளார்.

கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இளம் பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவர்கள் குழுவினர் ஆபரேஷன் செய்து இளம் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடை அகற்றினர். தற்போது இளம் பெண் நலமுடன் இருப்பதாகவும் ஒரு வார சிகிச்சைக்கு பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )