பல்பொருள் அங்காடிகளில் பணிபுரிபவர்களின் விடுமுறைக்காக குரல் கொடுக்கும் சஜித்

பல்பொருள் அங்காடிகளில் பணிபுரிபவர்களின் விடுமுறைக்காக குரல் கொடுக்கும் சஜித்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பல்பொருள் அங்காடிகளில் பணிபுரிபவர்களுக்கு செப்டெம்பர் 21 ஆம் திகதி விடுமுறை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேடப்பாளர் சஜித் பிரேமதாச நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

பல காலங்களாக ஜனாதிபதி தேர்தலின் போது பல்பொருள் அங்காடிகளில் பணிபுரிபவர்கள் விடுமுறைகளை பெற்றுக்கெள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சில பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளர்கள் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க மறுத்துள்ளதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களுக்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேடப்பாளர் சஜித் பிரேமதாச இம்முறை ஜனாதிபதி தேர்தலின் போது பல்பொருள் அங்காடிகளில் பணிபுரிபவர்களுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )