ஸ்ரீ தலதா மாளிகையில் புகைப்படம் எடுத்த ஜோடிக்கு சிக்கல்

ஸ்ரீ தலதா மாளிகையில் புகைப்படம் எடுத்த ஜோடிக்கு சிக்கல்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்குள் அண்மையில் திருமணமான தம்பதியொன்று திருமணத்திற்கு முன்னரான படப்பிடிப்பு நடத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தலத்தில் உள்ள ஹெவிசி மண்டபம் மற்றும் அம்பராவா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த ஜோடி புகைப்படம் எடுக்கப்பட்ட சம்பவம், சமூக ஊடகங்களில் கடுமையான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல (பிரதான பரிபாலன பொறுப்பாளர்), சம்பவம் தொடர்பில் தனக்குத் தெரியப்படுத்தியதாகவும், பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் உறுதிப்படுத்தினார்.

இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக புகைப்படக் கலைஞருடன் தம்பதியினர் இன்று (09) கண்டிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )