பின்னணிப் பாடகர் வேல்முருகன் கைது

பின்னணிப் பாடகர் வேல்முருகன் கைது

மெட்ரோ தொடருந்து அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் பின்னணிப் பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சென்னையின் சில பகுதிகளில் மெட்ரோ தொடருந்து சேவைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இதனால் பணிகள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது.

வளசரவாக்கம் – ஆற்காடு சாலையில் மெட்ரோ தொடருந்து பணிகள் இடம்பெறுவதால், மெட்ரோ ஊழியர்கள் வீதித்தடை அமைத்து வாகனங்கள் செல்ல ஒரு வழிப்பாதை அமைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீதியில் பயணித்த பின்னணிப் பாடகர் வேல்முருகன், முன்னறிவிப்பின்றி சாலையை மூடி வேலை செய்வதாக மெட்ரோ பணி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் வாக்குவாதம் மோதலாக மாறியதுடன், வேல்முருகன் மெட்ரோ தொடருந்து அதிகாரியை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டதுடன், வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )