பொது மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்

பொது மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்

இலங்கையில் தற்போது இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாக பொரளை – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறும் அவர் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளார். 

2 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோரை அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக அரச வைத்தியர் ஒருவரை நாடுமாறும் பொரளை – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )