எகிறும் எலுமிச்சையின் விலை

எகிறும் எலுமிச்சையின் விலை

சந்தையில் எலுமிச்சையின் விலை அதிகரித்துள்ளது. இடைத்தரகர்களின் மோசடியான நடவடிக்கைகள் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ கிராம் எலுமிச்சை 50 ரூபாய் முதல் 100 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன் காரணமாக தமது உற்பத்திகளுக்கான உரிய விலை கிடைக்கவில்லை என எலுமிச்சை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் சந்தையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை 2,200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )