நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட 75 மில்லியன் ரூபாய் நட்டஈட்டை முழுமையாக செலுத்தத் தவறியதன் காரணமாக இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (27) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, ஒக்டோபர் 7ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு நிலந்த ஜயவர்தனவுக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )