துமிந்த  திசாநாயக்கவின் மனு நிராகரிப்பு

துமிந்த திசாநாயக்கவின் மனு நிராகரிப்பு

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் செயற்படுவதற்கு தடை ஏற்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கட்சியின் பதில் பொது செயலாளர் துமிந்த திசாநாயக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பதில் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தமக்கு தடையின்றி கட்சி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக உத்தரவு பிறப்பிக்குமாறு துமிந்த திசாநாயக்க இந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த மனு மீதான நீண்ட விசாரணை நேற்று(15) நிறைவு பெற்ற நிலையில் இன்று(16) காலை தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்தது. 

இந்த நிலையில், மனுதாரர் தமது கோரிக்கை தொடர்பில் திருத்தப்பட்ட மனுவொன்றை தாக்கல் செய்ய முடியும் என கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி சந்துன் விதான இதன்போது அறிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )