1,083 செல்போன்களுடன்  இருவர் கைது

1,083 செல்போன்களுடன்  இருவர் கைது


கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்,  1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு ​கொண்ட பென்டிரைவ்களை வைத்திருந்த 2 இலங்கைப் பயணிகளை கைது செய்துள்ளனர்.

இன்று (17) காலை துபாயில் இருந்து குறித்த  இலங்கைப் பயணிகள் இருவரும் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததாகவும், சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு 12 மற்றும் கொழும்பு 14 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 59 மற்றும் 24 வயதுடைய இரண்டு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )