வலம்புரி சங்கை விற்க முயன்றவர் கைது

வலம்புரி சங்கை விற்க முயன்றவர் கைது

ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘வலம்புரிசங்கு’ ஒன்றை பேருவளை பிரதேசத்தில் வர்த்தகர்கள் குழுவிற்கு விற்பனை செய்ய முற்பட்ட நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரை கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் நேற்று (26) கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பலநாள் மீன்பிடி படகுகளை வைத்திருக்கும் மீனவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். தனது மீன்பிடி தொழில் குறைந்ததால், சுமார் 04 வருடங்களாக தனக்குச் சொந்தமான இந்த ‘வலம்புரியை’ விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் “இந்த வலம்புரியை கொள்வனவு செய்கிறேன்” என்ற போர்வையில் குறித்த மீனவர் கட்டுநாயக்க, 18 கணுவ சந்திக்கு வரவழைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட மீனவரையும், அவர் வசம் உள்ள வலம்புரியையும் இன்று (27) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )