எசல பெரஹெராவில் குழம்பிய யானை ; 13 பேர் காயம்

எசல பெரஹெராவில் குழம்பிய யானை ; 13 பேர் காயம்

ருஹுணு கதிர்காமம் மகாதேவலவில் எசல பெரஹெரா ஆரம்பமாகிய சிறிது நேரத்தில் ஊர்வலத்தில் பயணித்த யானை ஒன்று கீழே விழுந்ததில் ஏற்பட்ட சலசலப்பில் ஊர்வலத்தை பார்த்த 13 பேர் காயமடைந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (06) இரவு 9 மணியளவில் பெரஹரா ஆரம்பமானதையடுத்து, பெரஹராவை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அங்குமிங்கும் ஓடிவந்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஆபத்தான நோயாளர்கள் எவரும் இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )