கார்த்திகை மலரை  காலணியில் பதித்த பிரபல நிறுவனம் – தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு!

கார்த்திகை மலரை காலணியில் பதித்த பிரபல நிறுவனம் – தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு!

இலங்கையிலுள்ள பிரபல காலணி நிறுவனம் ஒன்றின் காட்சியறையில் கார்த்திகை மலர்கள் பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது

குறித்த காலணிகள் கொழும்பு – வெள்ளவத்தையிலுள்ள காலணி நிறுவனமொன்றின் காட்சியறையிலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிறுவனத்திற்கு இந்த விடயங்களை எடுத்துச் சென்று உற்பத்தியில் இந்த சின்னத்தை தவிர்க்கவும், ஏற்கனவே காட்சி அறையில் உள்ள குறித்த காலணிகளை மீளப் பெறவும் நடவடிக்கை எடுக்க தமிழர்கள் சார்பில் அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என சமூக வலைத்தளங்களில் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )