தற்காலிகமாக  இடைநிறுத்தப்பட்ட படகு சேவை

தற்காலிகமாக  இடைநிறுத்தப்பட்ட படகு சேவை

நயினாதீவு மற்றும் டெல்ஃப்ட் தீவுகளுக்கிடையிலான  படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட ஆடசியாளர் தெரிவித்துள்ளார்.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், டெல்ஃப்ட் தீவுகளில் இருக்கும் மக்களின் அவசரத் தேவைகளுக்காக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  யாழ்.மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டெல்ஃப்ட் தீவுகளில் வசிக்கும் மக்களுக்குக்கான அவசர சுகாதார சேவைகள் நிமித்தம் யாழ்பாணம் செல்வதற்க்காக இலங்கை கடற்படையினரால் விசேட படகு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், டெல்ஃப்ட் தீவுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )