நீர் மின் உற்பத்தி 40 வீதத்தால் அதிகரிப்பு

நீர் மின் உற்பத்தி 40 வீதத்தால் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் கடும் மழையால் நீர் மின் உற்பத்தி 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், மழையுடனான வானிலை ஆரம்பமாகுவதற்கு முன்னர் நீர் மின் உற்பத்தியானது 20 சதவீதமாகவே காணப்பட்டதாகவும் 39 வீதமாக காணப்பட்ட நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு, தற்போது 60 வீதமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )