மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

பதுளை, நுகே சந்தி பகுதியில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று (03) இரவு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு, உயிரிழந்தவர் ஹம்பாவெல, ஹிந்தகொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

காட்டு விலங்குகளிடமிருந்து மரக்கறி தோட்டத்தை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்சார இணைப்பில் சிக்கியதாலேயே இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )